Saturday, December 1, 2012

வார்த்தை தவறிவிட்டாய்


எங்கெல்லாம் நீதி புதையுண்டு,
அநீதி தலை தூக்கிறதோ
எங்கெல்லாம் நல்லவர்கள் கண்ணீர் வடிக்கிறார்களோ,
அங்கெல்லாம் நான் பிரசன்னமாவேன் என்று
தலைசிறந்த மேடைப்பேச்சாளனைப்போல்
கூறியிருந்தாய் அன்று!
இன்று நீயே வார்த்தை தவறிவிட்டாய்!
ஆயிரம் துயரங்கள் சூழினும் நீ வருவாய் என 
விழியெறிந்து காத்திருந்தும் நீ வரவில்லை
உயிரை உலுக்கும் துன்பங்கள்,
 நிஜத்துள் அடங்கா நிகழ்வுகள்,
 நிழலுக்குள் புதையுண்டு போன உண்மைகள்,
இவையெல்லாம் அவையேறி, அரங்கேறி
................போயின
ஆனபோதும் தேற்றிக்கொண்டோம்
"கலிகாலம் இது" என,
உள்ளுக்குள் உன் வார்த்தையின் நம்பிக்கையில்.................
ஆனால்..................
 நீதியும் அநீதியும் இடம் மாறி, உருமாறி,
உருக்குலைந்து போனதுதான் உண்மை..
பாண்டவர் மனைவி இருகையேந்தவில்லை
என வர மறுத்தாய் அன்று!
இன்று இருகையேந்தி மனங்கலங்கி
ஓராயிரம் குரல்கள் அழைத்த போதும்
 நீ வரவில்லை!
எல்லாரையும் போல நீயும்
அறிவுரைக்கு பஞ்சமின்றி உரைத்தாய்
ஒரு கீதாசாரம்.....
எது நடந்ததோ, எது நடக்கிறதோ
"அதுவெல்லாம்" என்னவென்று
உனக்கே தெரியும்
குற்றவாளிக்கூண்டில் நீதியிருக்க
தீர்ப்பு சொல்லும் நிலையில் அநீதி.........
இடர்களை ,இன்னல்களை உன்னைப்போல்
தெய்வம் ஒன்றே அறிந்திருந்தும்
 நீ கூட நிறம் மாறிவிட்டாய்..
வார்த்தை தவறிவிட்டாய்.......

No comments:

Post a Comment