Saturday, December 1, 2012

தினசரி பயணங்களில்....


 நெடுஞ்சாலைகளையும் பேரூந்துகளையும் நீக்கி
எண்ணிக்கொள்ள முடிவதில்லை
தினசரிகளுக்குள் புதைந்துபோய்விட்ட
என் போன்றவர்களின் வாழ்க்கையை...
தோளில் சுமையுடன் வரும் தாய்க்குலங்கள்
கண்டும் காணாத பாணியில்
முகத்தை மூடிக்கொள்ளும் இளவல்கள்
பார்க்கும் கணங்களில்கொதித்துப்போகிறேன்...
ஓடும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல்
தள்ளாடிவிழும் வயோதிபர்களை கண்டு
தந்தையின் நினைவில் மனங்கசிந்து போகிறேன்
தரிப்பிடங்களில் நின்று கையேந்தும் இளந்தளிர்களைக்கண்டு
கண் கலங்கியும் இருக்கிறேன்....
சில்லறைக்காய் சத்தமிடும் நடத்துனரும்
சில்லறைத்தனமாய் நடந்திடும் நவயுகமன்னர்களும்
என் கருத்துக்கு எட்டாதபடி தள்ளி நிற்கிறேன்...
மொத்தத்தில் என்னை விட்டு விலகி வெகுதூரம்
 நியாயம் கேட்க ஓடும் என்மனதை
இழுத்து திசைதிருப்புகிறேன்..
யன்னல் வழிக்காட்சிகளை ரசிக்க...........
தி

No comments:

Post a Comment